உதயநிதிக்கு எதிரான பிரேமலதாவின் கோரிக்கை நிராகரிப்பு

 
u

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வென்றார்.  இவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.   

stt

இதைத்தொடர்ந்து ஆர். பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில்,  உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும்,  அதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை அரசு ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

 உதயநிதியின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது எனவும் அதன் மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

 பிரேமலதாவின் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.    அதில்,  தன் மீதான வழக்கின் விவரங்களை மறைக்க வில்லை எனவும்,  அதனால் தான் வேட்பு மனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம் தனது வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே பிரேமலதாவின் தேர்தல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கில் நீதிபதி பாரதிதாசன் என்று உத்தரவு பிறப்பித்தார்.   தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு வராத நிலையில் 22 வழக்குகள் பற்றிய விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருப்பதாகவும் , தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி உதயநிதியின் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரித்தார்.