ஸ்டாலின் மீதான கோபத்தை திமுக எம்.பியிடம் காட்டிய ராகுல்

 
r

 ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.  குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதால் நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

rl

 பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர்.  ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவினர் பேரறிவாளன் விடுதலையை வரவேற்று பேசி வருகின்றனர்.  பேரறிவாளனை அழைத்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின். அதுகுறித்து அவர்,  ‘’30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன்’’என்று தெரிவித்திருந்தார்.

pe

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து மனம் விட்டு பேசி இருக்கிறார் பேரறிவாளன்.  ஸ்டாலினின் இந்த செயல் காங்கிரசாரை பெரிதும் ஆத்திரமடைய செய்திருக்கிறது.  முதல்வர் ஸ்டாலின் செயல் ராகுல் காந்தியையும் பெரிதும் பாதித்திருக்கிறது.  அதனால் தான் அவர் ஸ்டாலின் மீதுள்ள கோபத்தை திமுக  எம்.பி. மீது காட்டியிருக்கிறார்.

rah

 ஐரோப்பிய நாடான பிரிட்டன்  தலைநகரான லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் பங்கேற்று இருந்தார்.  இந்த மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த திருச்சி சிவா எம்.பி. பங்கேற்கவில்லை.  அதற்கு காரணம், திமுகவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் காந்தி ரத்து செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரிட்ஜ் இந்தியா என்கிற அமைப்பின் சார்பில் லண்டனில் ’இந்தியாவுக்கான சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் சர்வதேச சர்வதேச மாநாடு நேற்று நடந்தது.  இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம். பி. ராகுல் , மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ்   உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

rh

 திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  பேரறிவாளன் விடுதலைக்கு பின்னர் திமுக அதற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் திருச்சி சிவா பெயரை ராகுல் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.