பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் விரும்பினால், எந்த கட்சியையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்யலாம்... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் விரும்பினால், எந்த கட்சியையும்  தேர்தலில் வெற்றி பெறச் செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, ஆர்வலர்கள் மேதா பட்கர் மற்றும் ஜி.ஜி. பரிக் தலைமையிலான சிவில் சமூக உறுப்பினர்களுடன ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருந்தாலும், சமூக ஊடகங்கள் மூலம் இந்திய தேர்தல்கள் மோசடி செய்யப்படலாம். பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் விரும்பினால், எந்த கட்சியையும்  தேர்தலில் வெற்றி பெறச் செய்யலாம்.

மேதா பட்கர்

முறையான சார்பு அங்கு பயன்படுத்தப்படுகிறது. எனது சமூக ஊடக கையாளுதல்கள் அதற்கு நேரடி உதாரணம். ஒரு சித்தாந்தம் மற்றும் அதன் தலைவர்களால் சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க வகுப்புவாத வன்முறை ஒரு மூலோபாய ஆயுதமாக விதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒரு சித்தாந்தம் மற்றும் அதன் தலைவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை ராகுல் காந்தி மறைமுகமாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள்

இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் 20ம் தேதியன்று இந்திய ஒற்றுமை பயணம் மத்திய பிரதேசத்தில் நுழைகிறது.