இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன! ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ கலாய்த்த புகழேந்தி

 
Pugazhendhi

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது விளையாட்டு தனமாக இருப்பதாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். 

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  புகழேந்தி நீக்கம் | pugazhendhi dismissed from admk | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News ...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, அவர் உள்ளிட்ட அதிமுகவினர் சிலர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கூறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “சசிகலாவை சந்தித்த காரணத்தினால் ஓ ராஜா உள்ளிட்ட சில அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த நடவடிக்கையானது ஏதோ விளையாட்டு பிள்ளைகள் செய்வது போல விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஓ. பன்னீர்செல்வத்தின் மீது இருந்த நம்பிக்கைகள் குறைய ஆரம்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏதோ விளையாட்டு விளையாடுவது போலவும் உள்ளது. அவ்வப்பொழுது இதுபோன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.

எனவே, இந்த செயலானது தற்போதைக்கு விளையாட்டுச் செய்திகள் இத்துடன் நிறைவடைகிறது என்பது போல் உள்ளது. மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீண்டும் மோதும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என விமர்சித்துள்ளார்.