மூன்று நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவு- ராகுல் குற்றச்சாட்டு

 
ra

மூன்று பணக்கார நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

 2016 ஆம் ஆண்டு இதே நவம்பர் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு மக்களின் தலையில் அந்த இடி விழுந்தது.  500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்  பிரதமர் மோடி.  அதற்குப் பாட்டாக புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையினால் கருப்பு பணம் வெளியே வரும் என்றார்.  

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு பெரும் பதற்றம் அடைந்தது.   தங்களிடம் வைத்திருக்கும் பணத்தை மாற்றுவதற்காக மக்கள் அங்கே இங்கே என்று அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.   அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆறாவது ஆண்டு இன்று.

ga

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.   நடை பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி. அப்போது பிரதமரை கடுமையாக விமர்சித்தவர்,   தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவில் பொருளாதாரத்தை ஏகபோக மாற்றுவது உறுதி செய்யவே பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கை தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை.   2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு தாக்குதல் என்றார்.

 தொடர்ந்து பேசியதாவது வந்து கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டினார்

பண மதிப்பிழப்பினால் கருப்பு பணம் வெளியே வரும் என்றார்.    கருப்பு பணம் வரவில்லை.  வறுமைதான் வந்தது.  பணம் இல்லாத பொருளாதாரமாகவில்லை. பொருளாதாரம் பலவீனமானது .  ஒளிந்தது பயங்கரவாதம் அல்ல கோடிக்கணக்கான சிறு தொழில் வேலைகள் தான்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையில்  50 நாட்கள் வாக்குறுதியுடன் பொருளாதாரத்தை ஒழித்து விட்டார் என்று கடுமையாக சாடினார்.

 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமாக 50 நாட்களில்  கருப்பு பணத்தை ஒழித்து விடுவதாக மத்திய அரசு சொல்லிருந்து . ஆனால் இந்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகிறது. இந்த நிலையில் இன்றும் அதே குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார் ராகுல்.