"அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே"

 
அய்

பிரதமரின் மேடையில் சில கோரிக்கைகளை முன் வைத்ததற்காக முதலமைச்சரின் பேச்சை எண்ணி வெட்கப்படுகிறோம் என்று அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை  வாடா போடா என்று ஒருமையில் பேசி,  பொறுக்கி என்று கடுமையாக விமர்சித்து, அளவுக்கு அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்து விடுவோம் கடுமையாக எச்சரித்துள்ளார் அமைச்சர் தா. மோ.அன்பரசன்.  அதற்கு அண்ணாமலை,  ஆமாம், நான் பொறுக்கிதான் என்று சொல்லி, அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அப்

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  தமிழக அமைச்சர் அன்பரசன்  பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும்  ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய் விடும் ஜாக்கிரதை' என்றும் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார்.

ஒருமையில் பேசவும், 'வாடா போடா' என்றும், 'பொறுக்கி' என்றும் ரௌடிகளை போல் பாஜகவினருக்கும் பேச தெரியும். ஆனால் பேசமாட்டார்கள். ஆனால் அப்படி பேசும் பொறுக்கிகளை நொறுக்கி தள்ளிய போலீஸ் தான் அண்ணாமலை என்பதை அன்பரசன் 'மரியாதையாக' புரிந்து கொள்வது நல்லது என்கிறார்.

ண்ட்

"ஒரு வாரம் தூக்கி உள்ளே வைத்தால் கட்சியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று போய் விடுவான் பேசுகிறார்.  நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. ஜெயிலுக்கு பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பி விடுவோம்" என்றும் அன்பரசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. "அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே" என்ற வீர வசனத்தை பேசியது யார் என திமுக வினர் மறந்து விட வேண்டாம் என்கிறார் நாராயணன்.

தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட அந்த நபரை முதல்வர் மு.க ஸ்டாலின்  அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். பிரதமர் குறித்து அவதூறாக பேசியதற்காகவும், அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காகவும் ரௌடித்தனமாக பேசிய அமைச்சர் அன்பரசனை கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டியது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையின்  பொறுப்பு மற்றும் கடமை. தமிழக காவல் துறை இது போன்ற கொலை மிரட்டல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது.   இதை வேண்டுகோளாக எடுத்துக்கொண்டாலும் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி இருக்கிறார்.