கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ் மகன் பரபரப்பு விளக்கம்

 
jj

நீதி வேண்டும்! என்ற தலைப்பில் ஓபிஎஸ் மகன் விபி ஜெயபிரதீப், நேற்று தனது கோரிக்கை வைத்திருந்தார்.  அவர் மேலும்,   ‘’எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை  கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இவன் அம்மாவின் உண்மை தொண்டன் வி. ப. ஜெயப்பிரதீப்’’ என்று பதிவிட்டிருந்தார்.

கொடநாடு வழக்கில் ஓபிஎஸ் மகனின் இந்த டுவிட்டர் பதிவு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

p

நாலு  வருஷமா கோமாவில் இருந்தீங்களா? இப்போ கூட எதிர்கட்சி கிட்ட தான் முறையிடுறீங்க.  உங்க அப்பா துணை முதல்வராக இருந்தபோது என்ன செஞ்சீங்க? என்று பலரும் போட்டு வறுத்தெடுக்க, அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயபிரதீப்.

அவர், ‘உண்மை ஒருநாள் வெல்லும்’என்ற தலைப்பில்,  ‘’கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.   அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.      எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான  பங்களாவில் சம்பவம் நடந்த  ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.  மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் .  அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன்’’என்கிறார் . 

மேலும் அவர் அதுகுறித்து,   ‘’இரண்டு தினம்  முன்பு நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது.   நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது  சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை.  பத்திரிக்கையாளரும் இல்லை . சாதாரண மக்களின் ஒருவன் . 

ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது.   இதற்கு நியாயம்  கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது.

இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. 
நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால்.   இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற  கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்’’ என்கிறார்.