இப்படி பேசுவது பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம்.. பிரசாந்த் கிஷோரை தாக்கிய நிதிஷ் குமார்

 
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

பீகாரில் நிதிஷ் குமார் கடந்த மாதம்  மெகா கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்ததை, இப்படி அவர் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகாரில் நிதிஷ் குமார் கடந்த மாதம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். இதனை பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்தார். பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் மேற்கொண்ட ஆறாவது சோதனை என பதிவு செய்து இருந்தார். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

மேலும் நிதிஷ் குமாரின் பதவிக்காலம் குறித்து கருத்துக்கோரும் ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பையும் தொடங்கினார். அவரதுக்கு கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்குமா கேட்டுக் கொண்டார். இது கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கத்தை அமைப்பதில் நிதிஷ் குமார் மேற்கொண்ட 6வது சோதனை. இந்த முறை பீகார் மக்கள் பயனடைவார்கள் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்குமாறு கோரியிருந்தார். இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.  அப்போது, பீகாரில் ஆட்சி மாற்றம் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். 

பா.ஜ.க.

அதற்கு நிதிஷ் குமார் பதிலளிக்கையில் கூறியதாவது: பீகாரில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும், அவரது (பிரசாந்த் கிஷோர்) கூற்றுகளில் எந்த அர்த்தமும் இல்லை. 2005 முதல் மாநிலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஏபிசி  அவருக்கு தெரியுமா?. இவர்களுக்கு விளம்பரம் எடுக்கவும்,அறிக்கை விடவும் தெரியும். அவர்கள் இதில் வல்லுனர்கள்,இதையெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படி யாராவது  பேசினால்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அவர் மனதில் ஏதோ இருக்க வேண்டும். அது பா.ஜ.க.வுடன் இருந்து கொண்டு, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.