வலிமை வாய்ந்த அதிமுகவில் ஊடுருவி பாஜக நரி தந்திரம் செய்கிறது - நாஞ்சில் சம்பத்

 
Nanjil

வலிமை வாய்ந்த அதிமுகவில் ஊடுருவி பாஜக நரி தந்திரம் செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Nanjil Sampath is acting in Vijay's film | விஜய் படத்தில் நடிக்கிறார்  நாஞ்சில் சம்பத் - எல்.கே.ஜி.யை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கிறார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  வட்டமலைப்பகுதியில் நடைபெற்ற திமுகவின் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கூறி ஆர்எஸ்எஸ்க்கு வேலைக்கு எடுக்கிற வேலையை மத்திய அரசு செய்கிறது. அக்னிபாத் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது எதிர்காலம் கேள்விகுறியாகும். இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டம் பெற்று விட்டு ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் கனவில் மத்திய அரசு கல் எரிந்து விட்டது. மோடி அரசை அகற்றுவதற்கான நேரம் வந்து விட்டதால் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டதால் மத்திய அரசு பிரச்சனைகளை திசைதிருப்ப அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அக்னிபாத் திட்டமே மத்திய அரசை சுட்டு பொசுக்கும். 

அதிமுகவில் ஒன்றை தலைமை இல்லை என்று வித்தாரம் பேசிய எடப்பாடி பழனிசாமி இன்று அடியாட்கள், மாவட்ட செயலாளரை கூட்டத்தில் பேச வைத்து ஒற்றை தலைமை என்று பேசி அத்துமீறுகிறார். ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை,பொதுப்பணித்துறையில் பல்லாயிரம் கோடி ஏப்பம் விட்டவர் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக கட்சியை எம்ஜிஆருக்கு அறிமுகம் இல்லாதவர் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அதிமுகவில் அதிகாரபூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு விலக்க  எடப்பாடி பழனிசாமி ஆயுத்தம் ஆகி வருவதற்கு பின்னால் பாஜக இருக்கிறது. 

வலிமை வாய்ந்த அதிமுகவில் பாஜக ஊடுருவி கட்சியில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரி தந்திரத்திற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகி உள்ளதால் அவருக்கு சாபவிமோசனமே கிடையாது. கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அனைத்து தொண்டர்களுக்கும் அறிமுகமானவர் செங்கோட்டையன் தான். கட்சி உடைத்துவிடுமோ என்று செங்கோட்டையன் கவலைபடுகிறார்” எனக் கூறினார்.