மோடி போபியா என்ற அரசியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மறைந்து விடுவார்கள்... முக்தர் அப்பாஸ் நக்வி கிண்டல்

 
பிரதமர் மோடி

மோடி போபியா என்ற அரசியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மறைந்து விடுவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.க.வின் முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கினார்.

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூருக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராம்பூர் பயணத்தின்போது முக்தர் அப்பாஸ் நக்வி மகாத்மா காந்தி மைதானத்தில் கொடி பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு 75 பட்டங்களை பறக்கவிட்டு தேசிய கொடியை கவரவித்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் முக்தர் அப்பாஸ் நக்வி உரையாற்றுகையில் கூறியதாவது: மோடி போபியா என்ற அரசியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மறைந்து விடுவார்கள். 

எதிர்க்கட்சியினரிடம் தவறு இருப்பதால்தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை.. முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

அவநம்பிக்கையான அரசியல் வீரர்களின் (தலைவர்கள்) தோரணை மற்றும் பாசாங்கு, பிரதமர் நரேந்திர மோடியின் கடின உழைப்பையும்,  நேர்மையையும் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது.  அவர்கள் (எதிர்க்கட்சிகள்) ஏற்கனவே இரண்டு டஜன் பிரதமர் வேட்பாளர்களின் காத்திருப்பு பட்டியலை தயார் செய்துள்ளனர். இது வேலையில்லா தற்பெருமை என்று அழைக்கப்படுகிறது. 

மோடி

அரசியல் சகிப்பின்மை மற்றும் போலியான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும், பிரதமர் மேடி உள்ளடக்கிய அதிகாரமளிப்பு என்ற அர்ப்பணிப்புடன் அயராது மற்றும் விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். மோடிக்கு நாட்டின் பாதுகாப்பும் கண்ணியமும் ராஷ்டிரநிதி, ஏழைகளின் நலன் ராஷ்டிரதர்மம். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.