தொண்டர்கள் மீது கல்லை எடுத்து எறிந்த அமைச்சர் நாசர்! மக்கள் கடும் அதிர்ச்சி

 
nn

 திருவள்ளூர் அருகே முதல்வர் மு. க. ஸ்டாலின்  பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர்  ஆய்வு செய்தார்.  அப்போது நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கல்லை தூக்கி எறிந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

na

 திருவள்ளுவர் அருகே முதல்வர் ஸ்டாலின் பங்குபெறும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.  திமுக சார்பில் நாளை மாலை வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்காருமிடம்,  முதல்வர் பங்கேற்கும் மேடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய பால்வளத் துறை அமைச்சர் நாசர் சென்றார்.

 அப்போது அமைச்சர் நாசர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.   இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர்,  சக கட்சிக்காரர்களை போடா நாற்காலியை எடுத்து வா என்று சொல்லி கல்லை எடுத்து எறிந்தார்.   தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் ஒருவர் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி அநாகரிகமாக  தொண்டர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த கட்சிக்காரர்கள்,  அங்கே இருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  

 ஒரு அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி செய்யலாமா? என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அவர் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.