இரத்தக்களரியை நிறுத்த ஒரே வழி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே.. மெகபூபா முப்தி

 
வெளிநாட்டு தூதர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியை விட்டு நீக்கிய மெகபூபா முப்தி….

இரத்தக்களரியை நிறுத்த ஒரே வழி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே என்று மத்திய அரசை மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று முன்தினம் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து, இரத்தக்களரியை நிறுத்த ஒரே வழி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே என மெகபூபா முப்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி இது தொடர்பாக கூறியதாவது: இரு வழிகளிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் என்று சொன்னால், அதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அதனால் தீவிரவாதம் குறைந்தது மற்றும் ஊடுருவல் குறைந்தது. ஒவ்வொரு பங்குதாரருடனும் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அதனால் பீகாரை சேர்ந்த வீரர், சி.ஆர்.பி.எப். வீரர் அல்லது ஏ.எஸ்.ஐ. முஷ்டாக் அகமது (ஜே.கே. போலீஸ்) அல்லது ஒரு சாமானியர் அல்லது காவலில் கொல்லப்பட்ட முஸ்லிம் (முனீர்) போன்றவர்கள் உயிர் இழக்க மாட்டார்கள். 

பா.ஜ.க.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது நடக்கும், நடத்தப்படுமா என்பது எங்களுக்கு தெரியாது. இங்குள்ள மக்களை அதிகாரம் இழக்கச் செய்ய பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்களை கொண்டு வந்து அவர்களின் இருப்பை துடைக்க முயல்கிறது. அவர்கள் தேர்தலை நடத்த தயங்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.