9 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 நிதியா.?? வன்மையாகக் கண்டிக்கிறேன் - வெங்கடேசன் எம்.பி.,
தமிழகத்தில் 9 புதிய ரயில் திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமெ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்படுவதாகவும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 511116 8௦௦% என்று சொல்லப்படும் இரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டூ-புத்தூர்; ஈரோடூ- பழனி ;சென்னை -கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி- இருங்காட்டூக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்- தர்மபுரி ஆகிய எட்டூ புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டூமே ஒதுக்கப்பட்டூள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய வழித்தடத்திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவை. அதற்கு 59 கோடி ஒதுக்கப்பட்டூள்ளது. அதை வரவேற்கிறேன். காட்பாடி -விழுப்புரம் ரெட்டப்பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டூள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு 1,600 கோடி தேவை .ஆனால் வெறும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டூள்ளது. அதேபோல ஈரோடூ -கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு 650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டூள்ளது வெறும் ஒரு கோடி ரூபாய். தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி ரெட்டப்பாதை திட்டமும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோயில் இரட்டை பாதை திட்டமும் கன்னியாகுமரி- நாகர்கோயில் திருவனந்தபுரம் இரட்டை பாதை திட்டமும் தொடர்ந்து காலதாமதமானது. இது குறித்து பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டூ சென்றோம். தொடர்ந்து கடந்த ஆண்டும் கடூம் எதிர்வினையாற்றினோம்.
அதன் தொடர்ச்சியாக இப்பொழுது மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி ரெட்டைபாதையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டூள்ளது. வாஞ்சி மணியாச்சி- நாகர்கோயில் திட்டத்திற்கு 1700 கோடி தேவை. இதுவரை 750 கோடி செலவு செய்யப்பட்டூள்ளது. நடப்பாண்டில் 360 கோடியும் வரும் ஆண்டில் 425 கோடியும் ஒதுக்கப்பட்டூள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம் விரைந்து முடிவடைய நடவடிக்கை எடூக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டூகளுக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இது பற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்சியாக நடப்பாண்டூ(2021-22) 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டுக்கு ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டூள்ளது. எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடூத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்க்கு 900 கோடி முதலீடூ செய்ய வேண்டும் இதுவரை 250 கோடி செலவு செய்யப்பட்டூள்ளது. நடப்பாண்டூ 700 கோடியும் அடுத்த ஆண்டூக்கு400 கோடியும் ஒதுக்கப்பட்டூள்ளது.
வரவேற்கத்தக்கது .இந்த திட்டங்களை இரண்டூ ஆண்டூகளில் முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் ரெட்டைபாதை முடிவடைந்தது போக்குவரத்து இலகுவாகும். தமிழக புதிய வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.