எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க வந்த சூனியக்காரர்- கோவை செல்வராஜ்

 
covai selvaraj

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. இனிமே தான் ஓபிஎஸ்  ஆட்டமே இருக்கு.. கோவை செல்வராஜ்.!

அப்போது பேசிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை மிகவும் தரமற்று பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். 1967-ல் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன்அரசியலுக்கு வரும்போது நீங்கள் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருக்கிருப்பீர்கள். எடப்பாடி பழனிசாமி தலைமை பண்பு இல்லாதவர்.மின்சார துறை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், அதிமுகவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உழைத்தவர்‌‌ பண்ருட்டி ராமச்சந்திரன். அவர் தேமுதிகவில் பணியாற்றிய போது திமுகவை விட அதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக தேமுதிக இருந்தது.

ஜெயலலிதா அவர்களால் நல்ல தலைவர் என பெயர் எடுத்தவரை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். பழனிசாமி முதலமைச்சரான பிறகு அதிமுக நான்காக பிரிந்துள்ளது. அதிமுக மக்கள் பிரச்சினை எடுத்து வைக்காமல் உட்கட்சி சண்டையிட்டுக் கொண்டுள்ளது. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு வழக்கு தீர்ப்பில் குற்றவாளி யார் என்று தெரியும் பொழுது இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் பழனிசாமி செய்த தவறுகள் பட்டியலிட்டு சொல்லப்படும். அதிமுக கட்சியை அழிப்பதற்கு என்று ஒரு சூனியமாக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்றார்.