காக்காவை மட்டமாக பேசாதீங்க - காக்காவோட மகத்துவம் தெரியுமா உங்களுக்கு? செல்லூர் ராஜூவை சாடும் கரு.நாகராஜன்

 
க

காக்காவை மட்டமாக பேசாதீர்கள்.  அதன் மகத்துவம் தெரியாமல் பேசுகிறார் செல்லூர் ராஜு என்று கரு.நாகராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார். பாஜகவினர் காக்கா கூட்டம் பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்ததற்கு,  பாஜக துணைத்தலைவர் கரு. நாகராஜன் இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கிறார்.

க

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.   ஆனால் பாஜக தான் எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது.  எதிர்கட்சிக்கான வேலையை செய்கிறது என்று பாஜகவினர் தொடர்ந்து சொல்லி அதிமுகவினரை வெறுப்பேற்றி வருகின்றனர் .  இதனால் அதிமுகவினர் கடுப்பாகி பாஜகவினரை கடுமையாக அர்ச்சித்து வருகிறார்கள்.

செ

 அந்த வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,   பாஜகவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள்.   அதற்காக எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது.   இறை எங்கே இருக்கிறதோ அங்கே தான் அதிகமாக காக்கா கூடும்.   பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலையில் நாகூரில் அதிக அளவில் புறாக்கள் இருக்கும்.   சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அந்தப் புறாக்கள் எல்லாம் வேளாங்கண்ணிக்கு போய்விடும்.   ஆனால் அதிமுகவுக்கு அப்படியல்ல.  அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என்று கடுமையாக பேசியிருந்தார்.

க

 செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.   காக்காவின் மகத்துவம் அவருக்கு புரியாது.  நமது மூதாதையர்கள் எல்லாம் காக்காவாக இருப்பதால் தான் எல்லா சாமியையும் கும்பிடும் போதும் காக்காவுக்கு முதலில் சாப்பாடு வைத்துவிட்டு சாப்பிடுகிறோம். காக்காவை மட்டமாக பேசக்கூடாது.   பல கட்சிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை என்றார்.

 அவர் மேலும்,   காக்கா கூட்டத்தப் பாருங்க ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்று பாட்டு உள்ளது . அதை செல்லூர் ராஜ் மறந்துவிட்டார்.  நாங்கள் விரட்டி விட்டதும் ஓடும் காக்காக் கூட்டம் அல்ல .  பாஜக ஒற்றுமை கூட்டம்.   மாற்றத்தை தரக்கூடிய சக்தி படைத்த கூட்டம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.