இந்துக்களை அவமதிப்பவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது தோட்டாக்களால் கொல்ல வேண்டும்.. கே.எஸ்.ஈஸ்வரப்பா

 
கே.எஸ்.ஈஸ்வரப்பா

இந்துக்களை அவமதிப்பவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது தோட்டாக்களால் கொல்ல வேண்டும் என்று காளி போஸ்டர் விவகாரம் தொடர்பாக கர்நாடக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

லீனா மணிமேகலை என்ற இயக்குனர் தான் இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய டிவிட்டரில் பதவிட்டிருந்தார். அந்த போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில், காளி போல் வேடமணிந்த ஒரு பெண் தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (எல்.ஜி.பி.டி.) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சர்ச்சைக்குரிய காளி பட போஸ்டர்

இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது: காளி மாதா நம் அனைவரின் மரியாதையின் மையமாகவும், சக்தியாகவும் இருக்கிறார். காளி மாதா இந்திய கலாச்சாரத்தின் பிரதிநிதி. ஆனால் ஆவணப் படத்துக்காக காளி மாதா சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரை ஒருவர் தயாரித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் கோபத்தில் உள்ளனர்.

லீலா மணிமேகலை

முகமது நபிக்கு எதிராக நுபுர் எதிராக நுபுர் சர்மா சில கருத்துக்களை தெரிவித்தபோது, அதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல, இந்துக்களும் தங்கள் கடவுள் மற்றும் தெய்வங்களை அவமதித்ததற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இந்துக்களை அவமதிப்பவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது தோட்டாக்களால் கொல்ல வேண்டும். காளி தேவியை அவமதித்த திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.