அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது- கே. பாலகிருஷ்ணன்

 
K balakrishnan

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய அலுவலகக் கட்டிடத்தை மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாவட்ட செயலாளர் பாண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம்: ஸ்டாலினுக்கு  கே.பாலகிருஷ்ணன் பாராட்டு- Dinamani

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த எட்டு ஆண்டுகளில் பல முறை பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஆகியவற்றை உயர்த்திவிட்டு தற்போது சிறிதளவு வரியை குறைத்து ஒன்றிய அறிவித்துள்ளது. அதேபோல் எரிவாயு சிலிண்டர் விலைக்கு 200 ரூபாய் மானியம் என அறிவித்துள்ளதில் மோடி அரசு திட்டத்தின் கீழுள்ள பொதுமக்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது. இதன்படி 2 சதவிகிதம் மக்கள் கூட பயனடையமாட்டார்கள். கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் படாதபாடு பட்டுவருகின்றனர். 

பருத்தி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதுபோல் பல பொருட்களின் விலையும், வேலையில்லா திண்டாட்டமும் பலமடங்க அதிகரித்து உள்ளதற்கு காரணம் மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்.  இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளது. வெறுப்பு அரசியலை மனதில் வைத்து 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  வழிபாட்டு தளங்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நீர்த்துபோனால் பெரும் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மேலும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தது போல் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. அதே சமயம் எதிர்க்கவும் கூடாது என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாநில மொழி உரிமையை தட்டிப் பறித்து, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிற நடவடிக்கையை மோடி அரசு வெங்கய்யா நாயுடுவின் பேச்சை ஏற்று இந்த நடவடிக்கையை கைவிடுமா?

தமிழக அரசு ஒன்றிய அரசின் கட்டாயத்திற்கு அடிபணிந்து சொத்து வரியை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இல்லாவிட்டால் 50 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென சொல்வது பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் போல் உள்ளது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு வரியை உயர்த்தி இருந்தால் அவர்களை விலையை குறைக்க சொல்வதில் நியாயம் உள்ளது.

ஒன்றிய அரசின் வரி குறையும் பொழுது தமிழக அரசின் வரியும் தானாகவே குறைகிறது என்பதால் தமிழக அரசு விலையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக தமிழ்நாட்டை குறைக்க வேண்டாம் என சொல்லவில்லை. தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக மின் உற்பத்தியை அதிகரிக்காததே காரணம். எனவே தமிழக அரசு உடனடியாக தனியார் நிறுவனங்களிடம் போட்டுள்ள மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஒன்றிய அரசும் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை தாமதமின்றி கொடுக்க வேண்டும். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. பிரதமரின் முன்பு மாநில உரிமையை முன்வைத்து பேசுவதை தவறு என சொல்வது தவறு. அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கட்சத்தீவை பாஜக அரசு மீட்டால் அதை வரவேற்போம்‌” எனக் கூறினார்.