சீமான் ஒரு பாலியல் குற்றவாளி- ஜோதிமணி எம்.பி.

 
jothimani

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சூழலில் அவருக்கு 31 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

seeman

இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பேரறிவாளன் விஷயத்தில் செய்தது என்ன என்று கூற முடியுமா? ஜெயலலிதாவது இருந்த போது ஏதாவது தீர்மானம் ஏற்றினார்கள். ஆனால் கருணாநிதி ஆட்சியில்  நளினியை மட்டும் ஆயுள் தண்டனை  கொடுக்க முடியும் என  மற்ற 3 வரை தூக்கில் போட அனுமதித்தது. மேலும் இந்த போராட்டத்தின் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான்,  அவரே சட்டங்களை படித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை தானே முடித்து வென்று உள்ளார். வழக்கறிஞர்கள் பிரபு மற்றும்  பாரி இருவரும் தான் அவருக்காக வழக்கை முன்னெடுத்து சென்றார்கள். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவரும் தான் 400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார்” என சாடினார். 


இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜோதிமணி எம்.பி., “சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” எனக் குற்றஞ்சாட்டினார்.