ஜெயலலிதா உதவியாளர் குமுறல்! ‘’தேடி வந்த காலம் போய் ஆதரவை தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே!’

 
poo

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் மாறி மாறி கூட்டணி கட்சிகளிடம் வலிந்து சென்று ஆதரவு கேட்டு நிற்பதை பார்த்து மனக்குமுறலை கொட்டி இருக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.

 ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   பிப்ரவரி 27ஆம் தேதி இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.   திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் தந்தை ஈ.வி. கே. எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

o

 அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியும்,  இபிஎஸ் அணியும் போட்டியிட முயன்றார்கள்.   இதற்காக அவர்கள் கூட்டணி கட்சிகளிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.  அதுவும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியின் அணியினர் நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதை அடுத்து உடனே ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் கமலாலயத்திற்கு நேரில் சென்று அண்ணாமலை இடம் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 அதே நேரம் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் தங்கள் அணிய ஆதரவளிக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  இது தவிர தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன்,  புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரையும் இப்போஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்கள். 

 கூட்டணிக்கு கட்சிகளின் தலைவர்களைத் தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்பது வழக்கம்.  ஆனால் இந்த இடைத்தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வைக்கும் கட்சிகளின் தலைவர்களான ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் இரு அணிகளாக பிரிந்ததன் காரணமாக கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் தேடிச் சென்று ஆதரவு கேட்டு நிற்பதை பார்த்து தொண்டர்களிடையே பெரும் சலசலப்பு எழுந்திருக்கிறது. 

b

 மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் இதையெல்லாம் பார்த்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

’’தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவை தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே!’’என்கிறார்

அவர் மேலும்,  
‘’காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ..!’’ என்கிறார்.