இந்த குண்டு வெடிப்பு சதி வேலையா?இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

 
e

கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், நேற்று 23.10.2022  காலை  சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி  உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா?

அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

 இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி,  கோவை குண்டு வெடிப்புக்கு மூல காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தவும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.   அதில் காவல்துறை தலைவர் அளித்த பேட்டியில்,  சம்பவ இடத்தை தடைய அறிவியல் துறை நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர், வெடிகுண்டு பிரிவினரும் ஆய்வு செய்து வருவதாகவும்,  காரின் உரிமையாளர் யார்?  சிலிண்டர் வாங்கப்பட்டது தற்செயலா? சதிவேலயா என்ற கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

 இறந்த நபரின் பெயர் ஜமேசா முபின் என்றும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும் அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும்  பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

es

 வெடிகுண்டு வைத்த காரை இயக்கி மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து பல உயிர்களை பழிவாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள், கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் போன்றவை சிதறி கிடந்ததாகவும் செய்திகளில் வருகின்றன.   இது உண்மையிலேயே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகின்றது.

 இறந்த முபின் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர் என்று தெரியவில்லை என்று பேட்டியின்போது காவல்துறை தலைவர் சொல்லி இருக்கிறார்.  அனைத்து நிலைகளிலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.  இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வைக்கும் நிர்வாக திறமையற்ற விடிய ஆட்சியில் முதலமைச்சர் என்ன பதில் கூற போகிறார்?

 உளவுத்துறை காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.  இதற்கு காரணம் நிர்வாக திறமையற்ற தவறு செய்பவர்களை கண்டிக்கும் சட்டப்படியான அதிகாரத்தை காவல்துறைக்குத் தராமல் காவல்துறையை தங்களுடைய பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஏவல் துறையாக இந்த விடிய அரசு நடத்துகிறது.  

 நான் பலமுறை எனது அறிக்கைகளின் வாயிலாகவும் பேட்டிகளின் போதும் அம்மா அரசு எப்படி காவல்துறையை சட்டப்படி நேர்மையாக செயலாற்ற அனுமதித்ததோ அப்படியே இந்த விடிய அரசும் காவல்துறையை சுதந்திரமாக சட்டத்தின்படி செயலாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய வருகிறேன்.

இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? இல்லை ஏதேனும் சதிவேலையா? அப்படி எனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றார்களா என்பதை காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தவும் இன்றி சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி தூய்மையான குற்றவாளிகளையும் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.