அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா?

 
அட்

 அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டிருந்த சண்முகம் மனுவினை  இரண்டு நிதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தடை விதிக்க மறுத்து விட்டனர்.    இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தனி நீதிபதி ஏற்று  நாளை அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்.   இதனால் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

கடந்த முறை தனி நீதிபதியின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக அமையவில்லை. இரண்டு நீதிபதிகள் தீர்ப்புதான் சாதகமாக அமைந்தது.  இந்த முறை இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு சாதகமாக அமையாததால் தனி நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக அமையுமா என்ற பரபரப்பும் எழுந்திருகிறது.

ஜ்ஜ்

 கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி சென்னையில் வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  ஒற்றைத் தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கை விசாரனை நடத்திய தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தார்.    வழக்கின் மறு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் துறை சாமி , சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்தியது,   அப்போது ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரினால் தனித்தனியாக கையெழுத்து இடப்பட்டு இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுக் குழுவில் முன்வைத்து அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம்.   மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

 ஆனால் நீதிமன்றத்தின் 23 தீர்மானங்களையும் நிராகரித்தனர் இதை அடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவி சண்முகம் திண்டுக்கல் சீனிவாசன் ,ஜெயக்குமார் ஆகியோரை தண்டிக்க வேண்டும் எனவும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மீண்டும் சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   நீதிபதிகள் துரை சாமி சுந்தர் மோகன் முன்பு இந்த மனு  நேற்று விசாரணைக்கு வந்தது.   

எப்

 ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர் .  ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார்.   ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பொறுத்த வரைக்கும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்து இருந்தனர் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுவிட்டாலோ இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டாலோ இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவ்வாறு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சண்முகம் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணையில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டதால்,  பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவை அவசர வழக்காக கருதி நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட நீதிபதியும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

 பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.  அப்படி இருக்கும்போது வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என்று நேற்று மாலையில் தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.   உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.  ஓபிஎஸ் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு பிரசன்னகுமார் ஆஜராகி முறையிட்டதில்,  அவரது முறையீட்டினை ஏற்றுக் கொண்ட நீதிபதி   அவசர வழக்காக நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

இதனால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.