ரஜினிக்கு ஜகா வாங்குறதே வழக்கமா போச்சு- ஈவிகேஎஸ் இளங்கோவன்

 
ev


ஒவ்வொரு முறையும் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டு ஜகா வாங்குவது ரஜினியின் வழக்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

r

 சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் பங்கேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் குறித்த கேள்விக்கு,   பாஜகவின் அர்த்தம் என்னவென்று அவர்கள் வீசிய பொருளில் இருந்தே தெரிகிறது என்று கருமையாக விமர்சித்தார்.

மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு,   தமிழ்நாட்டில் மின் கட்டணம் இன்னும் அதிகப்படுத்தப்படவில்லை.   அதிகப்படுத்தப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.  இதற்கு முக்கிய காரணமே மோடி அரசுதான் .  தமிழ்நாடு அரசை மின்சார கட்டணம் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஓராண்டாகவே வற்புறுத்தி வருகிறது.   அவர்கள் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை .  மக்களை பாதிக்க வகையில் உயர்வு இருக்கும் என்று நம்புகிறேன் என்ற இளங்கோவனிடம்,

k

 ஆளுநர் -ரஜினி சந்திப்பு குறித்த கேள்விக்கு,   ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக சொல்கிறார்கள் . ஆனால் ரஜினியின் அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.   ரஜினியை பாஜகவினர் முன்னிலைப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன.  உண்மையில் அவர் அரசியலுக்கு வந்தால் தானே முன்னிலைப்படுத்த வேண்டும் . 20,  30 வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்கிறார்.  எம்ஜிஆர் ஆட்சியை தரப்போகிறேன் என்று சொல்கிறார்.  ஒவ்வொரு முறையும் இப்படி சொல்லிவிட்டு ஜகா வாங்குவது தான் அவரது வழக்கம் என்றார்.