நில மோசடி, கொலைமிரட்டல்.. விடுதலை ஆகிறாரா ஜெயக்குமார்?

 
j

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி தொடர்ந்து இருந்த வழக்கில் வரும் 13ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார்.   சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைந்திருக்கும் எட்டு கிரவுண்டு நில உரிமை தொடர்பாக ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும் அவரது சகோதரர் மகேஷுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது .  

ஹ்

இந்த பிரச்சினையில் ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும்,  கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.   இந்த புகாரின் பேரில் ஜெயக்குமார் ,அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் மீது கொலை மிரட்டல்,  சதித்திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில்  சென்னை மத்திய பற்றிய பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 தன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார் .  இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்த போது,  மருமகனுக்கும் சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.   கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்ததாக சொல்லப்படும் சம்பவத்திற்கு 2021 ஆம் ஆண்டு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

இதன்பின்னர்,  புகார்தாரர் மகேஷ் குமார் தரப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.   இதையடுத்து 13ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி  இளந்திரையன்.