நான் திருடர்கள் கூட்டத்தின் தலைவன் - அமைச்சரின் சர்ச்சை பேச்சு

 
n

தனது துறையில் ஏராளமான திருடர்கள் உள்ளார்கள் என்றும்,  தான் அவர்களுக்கு தலைவனாக இருக்கின்றேன் என்றும் விவசாயத்துறை அமைச்சர் சுதாகர் சிங் பேசியது பீகார் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.   கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர் சுதாகர் சிங்.  இவர் விவசாயத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.    இவர் கைமூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது விவசாய துறையில் திருட்டு செயல்களில் ஈடுபடாத ஒரு பிரிவு கூட கிடையாது.   நான் அந்த அமைச்சகத்தின் பொறுப்பாளராக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் நான் தலைவனாக இருக்கின்றேன்.   எனக்கும் மேலே பல திருடர்கள் உள்ளார்கள் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.

சு

 அவர் மேலும்,   அரசு மாறினாலும் வேலை செய்யும் முறை மட்டும் மாறவே இல்லை என்று  தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 தொடர்ந்து பேசிய அமைச்சர்,   மாநிலத்தில் தரமான நெல் உற்பத்தி செய்த விவசாயிகள் மாநிலம் விதைக்கழகம் வழங்கிய விதை நெல்லை வாங்கவில்லை.  ஒரு சில காரணங்களுக்காக வாங்கிய சில விவசாயிகளும் அதனை பயிரிடவில்லை.  விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்காமல் விதை நெல் கழகம்  100 ரூபாய் முதல் 150 கோடி வரை கொள்ளை அடித்திருக்கிறது என்று பேசியுள்ளார் சுதாகர் சிங் .  

அமைச்சரின் இந்த  பேச்சு பீகார் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையினையும்,  சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.