தாவி விட்டாரா தர்மர்? இத்தனை பிரச்சனைக்கும் காரணமான அவரை ஏன் இன்னும் விட்டு வச்சிருக்கிறார் எடப்பாடி?

 
ட்

அதிமுகவின் தற்போதைய பிரச்சனை அத்தனைக்கும் காரணம் தர்மர்தான் என்கிறது அதிமுக வட்டாரம்.  மாநிலங்களவை எம்பி விவாகரத்தில் சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேருக்கும் தான் அந்த ரெண்டு சீட் என்று எடப்பாடி தரப்பு முடிவு எடுத்திருந்த நிலையில்,   ஓபிஎஸ் தனது ஆதரவாளர் தர்மருக்கு அந்த சீட் கொடுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்ததால் தான் ஜெயக்குமார்,  சி.வி சண்முகம் ஒற்றை தலைமை வேண்டும்  என்கிற வாதத்தை தீவிரமாக முன் எடுத்துச் சென்றார்கள்.

 அதன் பின்னர் ஓபிஎஸ்சிடம் எம்பி சீட் கேட்டு சென்ற சீனியர்களும் தங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் கட்சியின் ஜூனியர் தர்மருக்கு கொடுத்து விட்டதால் அவர்களும் அதிர்ச்சியில் எடப்பாடி பக்கம் சென்று விட்டார்கள். 

ட்ட்

  ஒற்றை தலைம விவகாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும் அது இந்த அளவுக்கு உச்சத்திற்கு செல்ல  காரணம் இந்த தர்மர்தான்.   ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து அவருக்கு பக்க பலமாக நின்று வருகிறார் தர்மர்.   அதற்காகத்தான் தனது ஆதரவாளருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அந்த எம்பி சீட்டை போராடி வாங்கி கொடுத்தார் ஓபிஎஸ்.    ஆனால் அதுவே போதாத காலம் ஆகிவிட்டது ஓபிஎஸ்க்கு.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதே மேடையிலேயே ஓபிஎஸ்,  அவர் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் , ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியிஅன் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கினா.  இதை அடுத்து ஓ. பன்னீர் செல்வத்தின் மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி.

ஓ

 ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியையும் நீக்கியதற்கு ஓபிஎஸ் மிகவும் கண்டனம் தெரிவித்திருந்தார் . ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மரை மட்டும்  எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கட்சியை விட்டு நீக்காதது பெரும்  சலசலப்பை எழுப்பி இருக்கிறது அதிமுக வட்டாரத்தில் .  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் தர்மர் மட்டும் இன்னமும் நீக்கப்படவில்லை.

ஒருவேளை அவர் எடப்பாடி பக்கம் தாவி விட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது .  பொதுக்குழுவுக்கு முன்பாகவே தர்மரை தங்கள் பக்கம் இழுத்து விட பேச்சுவார்த்தை நடந்ததாக  தகவல்கள் பரவின.   இந்த நிலையில் அவரை அதிமுகவிலிருந்து நீக்காததால் அவர் எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   ஓபிஎஸ் பக்கம் நின்ற பலரும் எடப்பாடி பக்கம் சென்று விட்டார்கள். ஆனால் அதிமுகவின் தற்போது நடந்து வரும் இத்தனை பிரச்சனைக்கும் காரணமான தர்மர் எடப்பாடி  பக்கம் சென்றுவிட்டாரா? அதனால்தான் அவர் கட்சியை விட்டு நீக்கப்படவில்லையா?  என்று அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.