திமுகவின் ஊழலை அண்ணாமலை உடனே கண்டுபிடித்து தடுத்துவிடுகிறார் - எச்.ராஜா

 
h

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். 

சாதி இந்தியாவின் அடையாளம் என்று கூறும் எச்.ராஜா!

அப்போது பேசிய எச்.ராஜா, “கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாட்டில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இதேபோல் பல்வேறு திட்டங்களில் மோடியின் அரசு முன்மாதிரியான அரசாங்காமாக செயல்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல், 4 அமைச்சர் அண்டை நாடுகளில் அமர்த்தி தமிழ்நாடு சேர்ந்த 10ஆயிரம்  மாணவர்கள் உள்பட 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது. 

தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கள் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிலும் தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஊழல் மையங்களாக மாறி வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலம் இல்லாதவர்கள் நெல் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்ற ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். தி.மு.க. இந்து கோவில் விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருகின்றது. கோவில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு ஒப்பாகும். தி.மு.க.விற்கு சித்தாந்தம் ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வரும் கட்சி பா.ஜ.க. பாஜக மாநில தலைவர் ஊழலை வரும் முன் காப்போம் என்று தடுத்து வருகின்றார். இது வரை தமிழகத்தில் 7 லாக் அப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆன்மீகப் பெருமக்கள் கிரிவலம் வரக்கூடிய பாதையில் நாத்திகரான கருணாநிதிக்கு சிலை வைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடர உள்ளது” எனக் கூறினார்.