திங்கட்கிழமை நல்லசெய்தி! யாருக்கு..?

 
ஒஎ

அதிமுக பொதுக்குழு வழக்கில் திங்கட்கிழமை நல்ல செய்தி என்று தகவல் பரவுகிறது.  அதே நேரம் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரில்  யாருக்கு நல்ல செய்தி? என்ற கேள்வியும் எழுகிறது.  ஓபிஎஸ்க்குத்தான் நல்ல செய்தி என்றே பலரும் சொல்லி வருகின்றனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் சென்னை  நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

எஒ

அதன்படி  ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து நீதித்துறை பதிவாளரிடம் மனு அளித்திருந்தார். இதே போல் ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்பு முறையிடப்பட்டது.

தலைமை நீதிபதி எந்த முடிவும் எடுக்காத நிலையில் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது,  ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இது கீழ்த்தரமானது செயல், நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் செயல். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் . திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்து இருக்கலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

ஹ்

 இதன்பின்னர், வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நடைமுறை பிரச்சனை குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் , மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். 

அப்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி , இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடமே இதை நேரடியாக தெரிவித்து இருந்தால் நானே விலகியிருப்பேன் என்று சொல்லிவிட்டு,  தற்போது தலைமை நீதிபதியிடம் அளித்த புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதாக மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டிருந்த புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும் என்று தெரிவித்து வழக்கிலிருந்து விலகினார். இதன்பின்னர்,  அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முனீஸ்வநாத் பண்டரி உத்தரவிட்டார்.

ஓ

வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வருகிறது.  இந்த நிலையில்,  ‘’திங்கட்கிழமை நல்லசெய்தி’’ எனத் தகவல் பரவுகிறது.    ‘’சென்னைக்கு மாற்றப்பட்டு, ஆளும் மாற்றப்பட்டு,  திங்கட்கிழமை நல்லசெய்தி எனத் தகவல்.  அதுதான் "நல்ல செய்தியா"’’என்று அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, யாருக்கு நல்ல செய்தி? ஓபிஎஸ்க்கா? எடப்பாடிக்கா? என்று கேட்டு வருகின்றனர்.  ஓபிஎஸ்க்குத்தான் நல்ல செய்தி என்று பலரும் சொல்லி வருகின்றனர்.