சபரீசனுடன் 1 மணி நேரம் ஓட்டலில் பேசிய காயத்ரி ரகுராம் - போட்டுடைத்த அமர்பிரசாத் ரெட்டி

 
sa

 தமிழக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை.   இதற்கு காயத்ரி ரகுராம்,  அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டே வந்தார்.   அதனால் தான் அதை செய்து காட்டி விட்டார்.   நான் திரும்பவும் வலிமையுடன் வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.  

பாஜகவில் முதலில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார் காயத்ரி ரகுராம்.  அந்த பிரிவில் தனக்கு கீழே இருந்த நிர்வாகிகளை தலைவரின் முடிவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு நீக்கியதால் அந்த பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து காயத்ரியை தூக்கி அடித்தார் அண்ணாமலை. இதை அடுத்து வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  அந்த பொறுப்பில் இருந்தும் தற்போது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டிருக்கிறார். 

a

 சூர்யா சிவா- டெய்ஸி சரண் ஆடியோ விவகாரத்தில் தலைமை குறித்து கடுமையாக விமர்சித்ததாலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் குறிப்பாக அண்ணாமலை உட்பட பலர் போடும் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் கொடுப்பதற்கென்று ஒரு குரூப் இருப்பதாகவும் காசு கொடுத்து லைக்குகள் வாங்குகிறார்கள் என்றும் சொல்லி கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி இருந்தார் காயத்ரி ரகுராம்.  சிலரைப் போல் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் போலியான லைக்குகள் போலியான பாலோவயர்கள் வைத்து என்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அண்ணாமலையை மறைமுகமாக சாடியிருந்தார்.

 இதனால் காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்பட்டாலும்,  காயத்ரி ரகுராமின் நீக்கத்திற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஹோட்டலில் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி.

ap

 ’’மூன்று மாதங்களுக்கு முன்பு சோமர் செட் ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் காயத்ரி ரகுராம். போலிகளுக்கு பாஜகவில் இடம் இல்லை.   தலைவர் அண்ணாமலை சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறார்’’ என்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம்,   ’’முட்டாளே அது என் நண்பரின் பிறந்தநாள்.  அவர் என்னையும் சில பேசன் நண்பர்களையும் அழைத்து இருந்தார் .  சபரீசன் உள்ளிட்ட பலரையும் அழைத்து இருக்கின்றார்.   அது ஒரு எதிர்பாராத சம்பவம்.   ஹாய் மற்றும் ஹலோ சொல்வது என் டீசென்சி.  முகத்தை திருப்பிக் கொண்டு போக நான் முதிர்ச்சியற்றவள் அல்ல.  பிரதமர் மோடி கூட அரசு விவகாரங்களில் ஸ்டாலினை சந்திக்கிறார்’’ என்று கூறியிருக்கிறார்.