50 ஆண்டு கால காங்கிரஸ் பயணம்.. குட்பை சொன்ன சுனில் ஜாகர்

 
சுனில் ஜாக்கர்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எஸ்.சி. தலைவராக குறிவைத்து பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸார் சுனில் ஜாகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸின் தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுனில் ஜாகருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சுனில் ஜாகர் எந்த அறிக்கையையும் குழு முன் சமர்ப்பிக்கவில்லை. 

காங்கிரஸ்
இதனையடுத்து காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு, சுனில் ஜாகரரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு சுனில் ஜாகருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று சுனில் ஜாகர் பேஸ்புக் லைவ்வில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸூக்கு குட் லக் மற்றும் குட்பை. பஞ்சாப், சீக்கியர்கள் மற்றும் சீக்கியர்கள் மீது களங்கம் மற்றும் இந்துக்களை அவமதித்து அவமானப்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவர்கள் காங்கிரஸில் இருப்பதில் ஏதாவது பிரயோஜனம் உண்டா?

ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட் தேர்தலில் ஹரிஷ் ராவத்தின் தோல்வி தெய்வீக நீதி. காங்கிரஸ் தலைமை நண்பர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் சொத்துக்கள் மற்றும் கடன்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். காங்கிரஸூடான தனது உறவு, எனக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்ட நாளில் துண்டிக்கப்பட்டது. ஆனால் கட்சியுடனான எனது 5 தசாப்த கால தொடர்பு என்னை தடுத்து நிறுத்தியது. காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு, என்னை அனைத்து பதவிகளில் இருந்து நீக்குவதாக முடிவு எடுத்த நேரத்தில், நான் கட்சியின் எந்த பதவியிலும் இல்லை. இதுவே காங்கிரஸ் கட்சிக்கு கேடு. காங்கிரஸ் சிந்தனை முகாம் நடத்துவதற்கு பதிலாக கவலை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.