ஓபிஎஸ் வாகனத்திலிருந்த எடப்பாடி போட்டோவை செருப்பால் அடித்த ஆதரவாளர்

 
vன்

ஓ. பன்னீர்செல்வத்தின் வாகனத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை கிழித்து எறிந்து எடப்பாடி பழனிச்சாமியின் படத்தின் மீது செருப்பால் அடித்து அதைக் கிழித்து எறிந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.  

வ்வ்

 ஒற்றைத் தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்- எடப்பாடி இருவருக்கும் இடையேயான மோதல் உச்சத்திற்கு வந்திருக்கிறது.  இருதரப்பு ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தங்கள் நடத்தி வந்த நிலையில்,  தற்போது இரு தரப்பு ஆதரவாளர்களும் அவரவருக்கு எதிரானவர்களின் போட்டோவை போஸ்டரில் இருந்தும்,  கட்டவுட்டில் இருந்தும், சுவர் விளம்பரங்களில் இருந்தும்  கிழித்தும் வருகின்றனர்.

அதிமுக அலுவலகங்களிலிருந்து ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டு வந்தது.  அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியுள்ளனர்.   இதனால் மோதல் தீவிரமடைந்துள்ளது .

ஓன்

 இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்.   இதற்காக அவர் இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றபோது விமான நிலையத்தில் அவரை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.   மாலை சால்வை அணிவித்த பின்னர் 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுப்புகளுடன் ஓபிஎஸ்க்கு வழியெங்கும் பல்வேறு இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன.

 ஓபிஎஸ் தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டபோது,  பிரச்சார வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த எடப்பாடி படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  செருப்பை கழட்டி  படத்தை தாக்கினர் .  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கமிட்டனர் .  வாகனத்தில் இருந்த எடப்பாடியின் படத்தையும் கிழித்து எறிந்தனர்.