பதைபதைப்பில் எடப்பாடி! ஊழல் வழக்கில் இடைக்கால தடையை நீக்குகிறதா உச்சநீதிமன்றம்?

 
ஏஎ

ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க தற்காலிக தடை வழங்கிய உச்சநீதிமன்றம்  தற்போது தடையை நீக்க முடிவு என்று தகவல் பரவுகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் பரவுகிறது.  

ரெ

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு 4,833 ரூபாய் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டார் என்று திமுக புகார் கூறியது.   இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,   வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றினார்.  மேலும்,  ஆரம்ப கட்ட விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிரடியாக உத்தரவிட்டார்.  இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  அப்போது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் மேல்முறையீடு செய்திருந்தது.  

சு

 எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் நவம்பர் 29ஆம் தேதி அன்று சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் உள்ளது.  

 இதற்கிடையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி,  தலைமை நீதிபதி  ரமணா தலைமையிலான அமர்வில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.  தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டபோது,  இந்த முறையிட்டை பரிசீலனை செய்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.

இன்றையை விசாரணையில் இடைக்கால தடை நீங்குமா? என்ற பதைப்பதைப்பு எழுந்திருக்கிறது எடப்பாடி வட்டாரத்தில்.