என் தலைவரை ‘டச்’பண்ணிட்டா... துரைமுருகன் ஆவேசம்

 
du

 முதல்வரின் கடிதத்தை ஸ்டண்ட் என்று சொல்வதா? அவர்தான் தேர்தலுக்காக ஸ்டண்ட் செய்கிறார் என கர்நாடக அரசுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

 வேலூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.   நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு,  ராசா எம்பி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.   நிகழ்ச்சிக்குப் பின்னர் துரைமுருகனை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

 அப்போது முதல்வரின் கடிதத்தை கர்நாடக அரசு ஸ்டண்ட் என்று சொன்னது குறித்த கேள்விக்கு,   ’’காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதல்வர் கூறியிருக்கிறார்.   தடையாக இருப்பது தமிழகம் அல்ல கர்நாடக அரசு தான்’’ என்றார்.

du

 தொடர்ந்து அது குறித்து பேசிய துரைமுருகன்,   ’’முதலில் ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று தடை போட்டது கர்நாடக அரசு.  பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்டபோது அதை தடுத்து வந்ததும் கர்நாடக அரசுதான்.  தீர்ப்பாயம் வந்த பிறகும் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து கர்நாடக அரசுதான்.  தீர்ப்பாயம் வந்த பின்னர் அரசாணை போட்ட பிறகும் 3, 4 ஆண்டு காவிரி நீர் மேலாண்மை குழுவிற்கு தலைவரை நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசுதான்.  இப்படி காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது கர்நாடக அரசு.  ஆனால் அவர் தமிழகத்தை குற்றம் சொல்வது பெருமை இல்லை . முதல்வரின் கருத்து சரியல்ல.  காவிரி வரலாறு  குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை ’’என்று ஆவேசத்துடன் சொன்னார் .

மேலும் அவர்,   ’’இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்காது என்கிறார்.  மத்தியிலும் பாஜக கர்நாடகாவிலும் பாஜக நாங்கள் சொல்வதைத்தான் மத்திய அரசு கேட்கும் என்று மறைமுகமாக கர்நாடக முதல்வர் சொல்கிறார்.   முதல்வர் தவறான செய்தியை தருகிறார்.  நான் இதற்கு வருத்தப்படுகிறேன் . ஒரு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது சட்டவிரோதமா?  மேகதாது அணை கட்டக்கூடாது என செல்வது சட்டவிரோதமா?  இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முதல்வருக்கு தெரியவில்லை.   எங்களுடைய தலைவர் கடிதத்தை ஸ்டன்ட் என்று சொல்கிறார்.  அவர்தான் தேர்தலுக்காக ஸ்டன்ட் அடிக்கிறார் என்று சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது .   என் தலைவரை டச் பண்ணிட்டா.. இது திமுக ஜல்லிக்கட்டு மாடு சும்மா விடாது ’’என்ற ஆவேசமானார்.