பயமுறுத்தாதீங்க ஸ்டாலின்..தாங்கமுடியாது.. கடுமையாக சாடும் பாஜக

 
ss

நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை சென்னையில் செய்யப் போறோம்; காத்திருங்கள் என்றார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.  இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

காத்திருப்பதா? நேற்று மாலை பெய்த சிறு மழையால் சென்னையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மழை நீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி ஓடுவதால் அவைகள் மரணப்பள்ளங்களாக மாறி விட்ட சம்பவத்தை சொல்கிறீர்களா?  என்று கேட்கிறார்.

n

 அவர் மேலும்,  நேற்று இரவு பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டு  இருளில் மூழ்கிய பயங்கர சம்பவம் நடைபெற்றதை சொல்கிறீர்களா? தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்து கொண்டிருக்கும் கொடூர  சம்பவத்தை சொல்கிறீர்களா? பாதுகாப்பு விதிகளே கடைபிடிக்கப்படாமல் தோண்டிய பள்ளங்களினால் பாதசாரிகளுக்கு ஏற்பட்டு  கொண்டிருக்கும் பயங்கர சம்பவங்களை சொல்கிறீர்களா? அல்லது அந்த பணியாளர்களால் தினந்தோறும் கழிவு நீர் குழாய்களும், மின் இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படும் அவல சம்பவங்களை சொல்கிறீர்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கிறார்.

மேலும் அவர் இந்த விவகாரத்தில்,  போதும் ஐயா போதும்! நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து, மேலும் பல சம்பவங்களை சென்னையில் செய்ய போறோம் என்று பயமுறுத்தாதீர்கள் ஐயா! சென்னை வாசிகளால் தாங்க முடியாது என்கிறார்.