அதானியுடன் திமுக அரசு போட்ட ஒப்பந்தம்: உண்மையை உடைத்த நிர்மலா சீதாராமன்

 
kn

தொழிலதிபர் அதானியை பாஜக அரசு வளர்த்து விடுகிறது என்று திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில்,  கனிமொழி எம். பி. எம் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்த போது,  திமுக அரசு அதானியுடன் போட்ட ஒப்பந்தம் குறித்த உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

k

 நாடாளுமன்றத்தில் மக்களவையில் விலைவாசி  உயர்வு  தொடர்பான விவாதம் நடந்த போது திமுக எம்பி கனிமொழி பேசியபோதும் அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியபோதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   

கனிமொழி பேசும்போது,   இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக இருக்கிறார்.  பில் கேட்ஸை தாண்டியும் ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு இருக்கிறார்.  அதனால் சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு காரணம் அந்த கார்ப்பரேட் தொழில்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய கனிமொழி,    நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை .  ஆனால் அடித்தட்டிலேயே வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய தயங்கக்கூடிய இந்த ஆட்சி,  இப்படி இருக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருவது,  அவர்களின் வளர்த்தெடுத்து வார்த்தெடுத்து கொண்டு இருக்கக்கூடிய ஆட்சி தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

ni

 இதனால் கொதிப்படைந்த நிர்மலா சீதாராமன்,  பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும்தான் நீங்கள் எல்லாம் செய்வதாக குற்றம் சாட்டுகிறீர்கள்.  உங்கள் தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றன.   இது 35 ஆயிரம் கோடி மதிப்பாகும்.  அதானியுடன் சேர்ந்து டேடா சென்டர் அமைக்கிறது தமிழக அரசு.  மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள் தங்கள் ஆளும் மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.