நாட்டை இரண்டாக பிரித்தற்கு நேரு மற்றும் ஜின்னாவுக்கு நாடு நன்றி தெரிவிக்க வேண்டும்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.

 
சஜ்ஜன் சிங் வர்மா

நாட்டை இரண்டாக பிரித்து விவேகமான பணியை செய்த நேரு மற்றும் ஜின்னாவுக்கு நாடு நன்றி தெரிவிக்க வேண்டும் என மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாட்டை இரண்டாக பிரித்து விவேகமான பணியை செய்த நேரு மற்றும் ஜின்னாவுக்கு நாடு நன்றி தெரிவிக்க வேண்டும் என மத்திய பிரதேச சோன்கட்ச் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஜ்ஜன் சிங் வர்மா பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சஜ்ஜன் சிங் வர்மா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 1947ல் நாடு பிளவுபட்டதற்கு (இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிந்தது) ஜவஹர்லால் நேரு மற்றும் ஜின்னாதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனவரி 26 உரையில் கூறினார். 

நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நீக்கியது.. புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும்.. பிரியங்கா காந்தி

நாட்டை இரண்டாகப் பிரித்து விவேகமான பணியை செய்த நேரு மற்றும் ஜின்னாவுக்கு நாடு நன்றி சொல்ல வேண்டும். அகண்ட பாரதத்தின் யோசனையில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும். கற்பனை செய்து பாருங்கள், இந்த நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தால், மோடி ஜி, மோகன் பகவத் மற்றும் பிற மக்களுக்கு இடமில்லை. 

முகமது அலி ஜின்னா

பாகிஸ்தானில் தங்க விரும்பிய முஸ்லிம்கள் அங்கு சென்றனர். இந்தியாவில் தங்க விரும்பிய இந்துக்கள் இங்கேயே தங்கியிருக்கிறார்கள் என சஜ்ஜன் சிங் சர்மா பேசியுள்ளார். கடந்த வாரம் ஹரித்வாரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகையில், அடுத்த 20-25 ஆண்டுகளில் அகண்ட பாரதம் நிஜமாகி விடும் என்று தெரிவித்து இருந்தார்.