நாட்டுக்காக என் உயிரையும் கொடுக்க தயார்.. மவுனத்தை கலைத்த அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க.வினர் தன் வீட்டு முன் நடத்திய போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாட்டுக்காக என் உயிரையும் கொடுக்க தயார் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் பண்டிட்களை அரவிந்த் கெஜ்ரிவால் கேலி செய்ததாகக் கூறி, அவர் மன்னிப்பு கேட்கக்கோரி டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தின் முன் பா.ஜ.க.வின் இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் கேட்டில் பா.ஜ.க.வினர் பெயிண்ட்டை ஊற்றினர். மேலும் அந்த வீட்டில் உள்ள  சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீட்டுக்கு வெளியே உள்ள தடுப்புகளை பா.ஜ.க.வினர்  சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. 

கெஜ்ரிவால் வீட்டு முன் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர்

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் பா.ஜ.க. நடத்திய போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், பஞ்சாப் தேர்தலில் கிடைத்த தோல்வியால் இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. கொல்ல பார்க்கிறது என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மணிஷ் சிசோடியா, ராகவ் சதா போன்றவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது மவுனத்தை கலைத்தார்.

பா.ஜ.க.

பா.ஜ.க. தொண்டர்கள் தன் வீட்டு முன் நடத்திய போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் ஆளும் கட்சியான பா.ஜ.க. போக்கிரித்தனமான இது போன்ற குண்டாயிசம், நாட்டின் இளைஞர்களுக்கு என்ன செய்தியை அனுப்பும்?. அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியமல்ல, தேசமே முக்கியம். நாட்டுக்காக என் உயிரையும் கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.