நாற்காலி சண்டை! சமாதானம் செய்த மேயர்

 
ம்mட்

 திமுக , அதிமுக உறுப்பினர்களின் நாற்காலி சண்டையால் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

 மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மதுரை மாநகர மேயர் இந்திராணி தாக்கல் செய்தார்.  இதற்காக  இந்த மாமன்ற கூட்ட அரங்கிற்கு 100 வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வந்திருந்தனர் .

ம்ட்

அனைவரும் வந்திருந்தாலும்  அதிமுக உறுப்பினர்கள் முன்னதாகவே வந்துவிட்டதால் ஒரு பிரச்சனை எழுந்தது.  திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்து விட்டனர்.   இதனால் திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

 இதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.   நடைமுறைப்படி தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.  

 அடுத்த மாமன்ற கூட்டத்தில் முறையாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மேயர் உறுதி அளித்ததால் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் கூட்ட அரங்கில் சென்று கூட்டத்தில் பங்கேற்றனர்.  

 இந்த நாற்காலி சண்டையால்  இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின்னரே கூட்டம் தொடங்கி அதன் பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.