தலைமை அலுவலகம் திறக்கலாமா? சாவியை வைத்திருக்கும் இபிஎஸ் ஆலோசனை!

 
ee

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் நாளை அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  இன்று சேலத்தில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி அவர் கையில் உள்ளதால் நாளை அவர் அலுவலகத்தைச் சென்று திறப்பார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.   அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.   இந்த சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கில் சீல் அகற்ற உத்தரவிடப்பட்டது.  மேலும், தொண்டர்களும்,  நிர்வாகிகளும் ஒரு மாதத்திற்கு அலுவலகத்திற்குச் செல்ல தடை விதித்தது நீதிமன்றம்.

ad

அதே நேரம் அதிமுக அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.   அதன்படி அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.   

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்காலத் தடையும் பிறப்பிக்க முடியாது என்று சொல்லி வழக்கை ஒரு வாரத்திற்கு பின்னர் விசாரிப்பதாக சொல்லி இருக்கிறது.

இந்த நிலையில்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர் நீதிமன்ற நீதிபதி இருந்த தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது.   சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருப்பதால் நாளை அவர் கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலகத்திற்கு செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

சென்னையில் இருந்து இபிஎஸ் சேலத்திற்கு தனது இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.   அவரை சந்திப்பதற்காக மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.   அவர்களுடன் தலைமை அலுவலகம் செல்வது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.