"முதல்ல அரசியல் சாசனத்த படிங்க பழனிசாமி" - ஜி.ராமகிருஷ்ணனுக்கு ஆவேசம்!

 
எடப்பாடி

மார்க்சிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று பிரச்சாரம் செய்தார். இருகூரில் பிரச்சாரம் செய்த அவர் பேசியபோது, "கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. சட்டப்பேரவை, மக்களவைக்கு எப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறதோ, அதேபோல உள்ளாட்சிகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

மே 23 க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு- ஜி.ராமகிருஷ்ணன்  | nakkheeran

இதைப்பற்றி பேசுவதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தயாராக இல்லை. ஆனால், மத்திய அரசு முன்மொழிகிற "ஒரே நாடு ஒரே தேர்தல்" கோஷத்தை ஆதரித்து பேசுகிறார். பழனிசாமி முதலில் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறேன். கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியிலிருந்தபோது உங்களால் மக்கள் பிரச்சினை களைய முடிந்ததா? மத்தியிலுள்ள பாஜக அரசு மக்களைப் பிளவுபடுத்தியது. ஜிஎஸ்டி வரிகளை போட்டு தொழில்களை நிலைகுலைய வைத்தது. 

g-ramakrishnan-advive-to-palanisamy

பல்லாயிரக் கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் தூங்கிவிட்டு கண்விழித்தால் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிதான் முன்னால் நிற்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் துணையோடு ஊழல் மலிந்த நிர்வாகமாக மாற்றியது கடந்த அதிமுக அரசு. இவர்களிடம் இருந்து உள்ளாட்சிகளைப் பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்” என்றார்.