காங்கிரஸூக்காகவும், சோனியா காந்திக்காகவும் எனது உயிரை கொடுப்பேன்.. ராஜஸ்தான் எம்.எல்.ஏ.

 
சோனியா காந்தி

காங்கிரஸூக்காகவும், சோனியா காந்திக்காகவும் எனது உயிரை கொடுப்பேன் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மாநில சிரோஹி சட்டப்பேரவை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. சன்யம் லோதா கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில சட்டப்பேரவையில் பேசுகையில், நாங்கள் காந்தி-நேரு குடும்பத்தின் அடிமைகள் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. என்று கூறினார். ஆம் கடைசி மூச்சு வரை நாங்கள் அடிமைகள். காந்தி-நேரு குடும்பம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தால் நாங்கள் அடிமைத்தனத்தை தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்தார். சன்யம் லோதாவை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.   

சன்யம் லோதா

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபுலால் நகர் கூறுகையில்,  காங்கிரஸ் கட்சி எனது தாயை போன்றது. சோனியா காந்தி தியாகத்தின் உருவம். காங்கிரஸூக்காகவும், சோனியா காந்திக்காகவும் எனது உயிரை கொடுப்பேன் என்று தெரிவித்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகர்களில் ஒருவராகவும் பாபுலால் நகர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபுலால் நகர், பன்வர் சிங் பதி

ராஜஸ்தான் மாநில மின்துறை இணையமைச்சர் பன்வர் சிங் பதி கூறுகையில், நமது நாட்டின் சுதந்திரத்திற்கும், சுதந்திரத்திற்கு பின் நாட்டின் வளர்ச்சிக்கும் காந்தி குடும்பத்தினர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்திரா காந்தி நாட்டிற்காக தியாகம் செய்தார். நாட்டில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் அனைவரும் காந்தி குடும்பத்தின் தலைமையில் செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.