யார் ஆம்பளைன்னு அப்போ தெரிஞ்சிடும் ..அமைச்சருக்கு பதிலடி

 
sa

மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்' என அமைச்சர் செந்தில்பாலாஜி  கூறியுள்ளார்.

பி. ஜி. ஆர், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஊழல்களை வெளிப்படுத்திய போதெல்லாம், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அவதூறு வழக்கு தொடுப்பதாகவும் கூறி விட்டு ஓடி ஒளிந்தவர்கள் தைரியசாலிகளா? ஆம்பிளைகளா? என்று கேட்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

அவர் மேலும்,  தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால்  அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து பாருங்கள். யார் தைரியசாலி, ஆம்பிளை என்பது தெரிந்துவிடும் என்று சவால் விட்டுள்ளார்.  

sb

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது,  கரூரைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின் கட்டண உயர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.  எதற்காக மின் கட்டணத்தை  உயர்த்துகிறீர்கள் என்று கேட்டால் மோடி சொன்னார் நாங்கள் செய்தோம் என்று சொல்கிறார்.   மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும்.   தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் .  மற்றபடி மின்கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை என்றார்.

இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,   ‘’தைரியமான ஆண் மகனாக இருந்தால் மின்துறை பற்றிய முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடரலாம்.   ஆனால் பாஜக அதைச் செய்யவில்லை .  அந்த தைரியத்தை விட்டுவிட்டு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அரை வேக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் அல்ல இது.  அதற்காக என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

n

 உண்மையிலேயே தைரியம் இருந்தால் ஒரு ஆம்பளையா இருந்தால் அண்ணாமலை என் மீது கேஸ் போடட்டும்.  கேஸ் போட வேண்டியதுதானே? எல்லா அதிகாரமும் கையில் இருக்கே.  தமிழ்நாடு செய்யக்கூடிய தவறுகளை குறிப்பாக மின்சாரத்  துறை செய்யக்கூடிய தவறுகளை நீதிமன்றத்திற்கு சென்று தமிழ்நாடு பாஜக தங்களிடம் இருக்கும் விவரங்களை நீதித்துறையிடம் தாக்கல் செய்து வழக்குகளை என் மீது தொடரட்டும். ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும்.  தைரியமும் நேர்மையும் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும்.  நாங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கிறோம்’’என்றார்.

அமைச்சரின் இந்த சவாலுக்குத்தான் நாராயணன்  திருப்பதி,  தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால்  அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து பாருங்கள். யார் தைரியசாலி, ஆம்பிளை என்பது தெரிந்துவிடும் என்று சவால் விட்டிருக்கிறார்.