பாஜகவுக்கு அறிவே இல்லை.. துப்பு இல்லாத பழனிச்சாமி.. - விளாசும் திமுக

 
ba

திமுக பாஜகவுக்கு தெரிந்த ஒரே வார்த்தை ‘ஒரே’ தான்.  எதற்கெடுத்தாலும் ‘ஒரே’ சேர்த்து விட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி ‘ஒரே நாசம் ஒரே மோசம்! ’தலையங்கம் எழுதியிருக்கிறது.   

 அதில் மேலும்,   ஒரே மதம் -ஒரே மொழி-ஒரே உணவு- ஒரே கலாச்சாரம்- ஒரே தேர்வு- ஒரே தேர்தல்- ஒரே வரி- ஒரே உரம் என்று ஒரே பாட்டை பாடி அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது ஒரே மருந்து தான்.  தேசத்தை சொல்லி ஏமாற்றுவது திசை திருப்புவது நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த போகிறோம் என்பது அடுத்த பசப்புகள்.  

mo

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது . பாஜக ஆட்சி  அமைந்திருக்கிறது.  அதனை கலைக்க போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது.  அதை கலைக்க போகிறார்களா?  இதனை பாஜக எம்எல்ஏக்கள் ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களை கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

 பாஜகவுக்கு தெரிந்த பாதை என்பது கொள்ளை புறவழிதான்.   சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளுங்கட்சி உறுப்பினர்களை இழுத்து ஆட்சியைக் கலைப்பது அதற்கு தெரிந்த வழி.   அப்படி தவிர்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்?  ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தால் அதுவரை அந்த மாநிலத்தை ஆளப்போவது யார்? அந்த மாநிலத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஒரு வேலை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை பாஜகவின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறது அந்த கட்டுரை.

 குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலையே இரண்டு கட்டங்களாக தான் நடத்தினார்கள்.   ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை.  ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத நாட்டில் தான் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தப் போகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது அந்த கட்டுரை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறது.  அதனையும் நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே.  பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறது.  இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா என்று கேட்கிறது அந்த கட்டுரை.

s

 இவர்களுக்கு தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது என்கின்ற அறிவே இல்லை . தேர்தல் என்பது மக்களுக்காக நடத்தப்படுகிறது . நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படவில்லை .  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது.  நடைமுறை சாத்தியமற்றது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  இது குறித்த முதலமைச்சரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்திலும் நேரில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் சீட்டு வழங்கும் எந்திரங்களிலும் பற்றாக்குறை ஏற்படும் என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ஒரு முறை கூறியிருக்கிறார்.   இந்தியா முழுமைக்குமான பாதுகாப்பு என்பது சாத்தியமில்லை.  தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக வெளி மாநிலத்திலிருந்து படைவீரர்கள் இங்கு வருகிறார்கள்.   தமிழ்நாட்டில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வெளி மாநிலம் செல்கிறார்கள். அதனால் தான் இரண்டு மூன்று கட்டங்களாக மாநில தேர்தலில் நடத்தப்படுகிறது.   இவை எதுவும் தெரியாமல் செய்யப்படும் உளறல்தான் ஒரே தேர்தல் ஆகும்.

 ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து பழனிச்சாமி கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.   சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூட துப்பு இல்லாத பழனிச்சாமி தான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்ல கிளம்பி இருக்கிறார்.  அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம் சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும் என்கிறது அந்த தலையங்க கட்டுரை.