8 மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு! அண்ணாமலை அதிரடி

 
annamalai

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் முழுமையாக கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

BJP Annamalai sacks 8 district incharge

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் மாவட்டத் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகின்றன.


புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்படி, திருநெல்வேலி - கட்டளை எஸ்.ஜோதி, நாகப்பட்டினம் - டி.வரதராஜன், சென்னை மேற்கு - டி.என்.பாலாஜி, வட சென்னை மேற்கு - மனோகரன், கோயம்புத்தூர் நகர் - ஏ.பி.முருகானந்தம், புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு - எஸ்.எம்.செந்தில் குமார், திருவண்ணாமலை வடக்கு - சி.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.