அனைத்து விசாரணை அமைப்புகளின் அதிகாரமும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் எங்களோடு இருக்கிறார்.. கெஜ்ரிவால்

 
24 மணி நேரத்துல 9 கொலைகள்! போலீஸ் மட்டும் எங்க கையில இருந்தா இது நடக்குமா! பொங்கும் கெஜ்ரிவால்…

அனைத்து விசாரணை அமைப்புகளின் அதிகாரமும் உங்களிடம் (பிரதமர் மோடி) உள்ளது. ஆனால் கடவுள் எங்களோடு இருக்கிறார்  என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


பண மோசடி வழக்கில் தொடர்புடைய டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனையில்,  மொத்தம் ரூ.2.85 கோடி மதிப்புள்ள விளக்கம் அளிக்கப்படாத பணம் மற்றும் 133 தங்க நாணயங்கள் கைப்பப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த தகவல் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியவை

சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நிகழும் முன்னேற்றங்கள் (அமலாக்கத்துறை பறிமுதல்) குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், இந்த நேரத்தில் பிரதமர் ஆம் ஆத்மி கட்சிக்கு குறிப்பாக டெல்லி மற்றும் பஞ்சாப் அரசாங்களுக்கு பின்னால் முழு பலத்துடன் இருக்கிறார். பொய் மேல் பொய், பொய் மேல் பொய். அனைத்து விசாரணை அமைப்புகளின் அதிகாரமும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் எங்களோடு இருக்கிறார் என பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடி

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று கைது செய்தனர். மேலும்  சத்யேந்தர் ஜெயினை வரும் 9ம் தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதேசமயம், சத்யேந்தர் ஜெயினுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.