கடந்த 30 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகள் 2 முறை புலம் பெயர்ந்தனர். இரண்டும் பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்தது.. கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

கடந்த 30 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுக்ள இரண்டு முறை புலம் பெயர்ந்தனர், அந்த இரண்டும் பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்தது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டுகள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசை அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஒரு முறை தாக்கினார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்,  டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடக்கும் படுகொலைகள் சரியல்ல. கடந்த 30 ஆண்டுகளில், காஷ்மீரி பண்டிட்டுகள் இரண்டு முறை புலம் பெயர்ந்தனர். இரண்டும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது நடந்தது. அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 1990 காலகட்டத்தில் தீவிரவாதிகள் தங்களை குறிவைத்து தாக்கியதால் காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியேறினர்.

காஷ்மீர் பண்டிட்டுகள்

முன்னதா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: காஷ்மீர் பண்டிட்டுகள் இலக்கு கொலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது, காஷ்மீரில் உள்ள தற்போதைய பா.ஜ.க. அரசு அவர்களை போராட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. அரசு இப்படி நடந்து கொண்டால், மக்கள் படும் துன்பம் இரட்டிப்பாகும். தற்போதைய ஆட்சியில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டது, அரசின் செயல் திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும் என்பதால், பா.ஜ.க.வால் காஷ்மீரை கையாள முடியாது. 

பா.ஜ.க.

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்ய வேண்டாம். காஷ்மீரில் இலக்கு கொலைகள் நடப்பது, 1990ம் ஆண்டு மீண்டும் வந்து விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசு) எந்த திட்டமும் இல்லை.  பள்ளத்தாக்கில் எப்போதெல்லாம் கொலை நடந்தாலும், உள்துறை அமைச்சர் உயர் மட்ட கூட்டத்தை நடத்தினார், இந்த சந்திப்புகள் போதும், இப்போது எங்களுக்கு நடவடிக்கை தேவை. காஷ்மீர் நடவடிக்கையை விரும்புகிறது. ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்பேன். காஷ்மீரி பண்டிட்டுகளுடன் கையெழுத்திட்ட பத்திரங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.