எங்க கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள்... குஜராத் மக்களிடம் கெஜ்ரிவால் உறுதி

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள் என குஜராத் மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் என்று தெரிவித்தார்.


பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தனது தடத்தை பதிக்கும் வேளையில் இறங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று குஜராத் சென்றனர்.  குஜராத்தில் அகமதாபாத்தில் ஆம் ஆத்மியின் பேரணியில் இருவரும கலந்து கொண்டனர். அந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: 

பா.ஜ.க.

குஜராத்தில் 25 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. நான் எந்த கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. பா.ஜ.க.வை தோற்கடிக்க வரவில்லை. காங்கிரஸை தோற்கடிக்க வரவில்லை. குஜராத்தை வெல்ல வந்தேன். குஜராத்தையும், குஜராத்திகைளையும் வெற்ற பெற செய்ய வேண்டும். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டும். 

ஆம் ஆத்மி

25 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் (பா.ஜ.க.) இப்போது திமிர்பிடித்துள்ளனர். அவர்கள் இனி மக்கள் சொல்வதை கேட்பதில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்களை பிடிக்கவில்லை என்றால், அடுத்த முறை எங்களை மாற்றுங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.