ஒரு சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலுக்கு பா.ஜ.க. பயப்படுகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று சொல்கிறது ஆனால் ஒரு சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலுக்கு பயப்படுகிறது என்று பா.ஜ.க.வை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்..

டெல்லி மாநகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவை வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: டெல்லி மாநகராட்சி தேர்தலை (சரியான நேரத்தில்) நடத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) அரசியலை விட்டு விலகுவோம். 

பா.ஜ.க.

பா.ஜ.க. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று சொல்கிறது. ஆனால் ஒரு சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலால் (மாநகராட்சி தேர்தல்) பயந்து விட்டது. சரியான நேரத்தில் டெல்லி மாநகராட்சி தேர்தலை நடத்த பா.ஜ.க.வுக்கு நான் தைரியம் தருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஜனவரியில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி மாநகராட்சி, வடக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சியின் பிராந்திய பிரிவுகள் மற்றும் வருவாய் ஈட்டும் சாத்தியக் கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநகராட்சியின் 3 பிரிவுகளும் சீரற்றதாக இருந்தது. 

மத்திய அரசு

மேலும் காலப்போக்கில் 3 மாநகராட்சிகளின் நிதி சிக்கல்களை அதிகரித்தது, மாநகராட்சிகளின் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.