என்னை வெறுப்பதன் மூலம், நீங்கள் நாட்டை வெறுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்... பா.ஜ.க.வை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

என்னை வெறுப்பதன் மூலம், நீங்கள் நாட்டை வெறுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று பா.ஜ.க.வை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க. குற்றம் சாட்டினார்.

டெல்லி சட்டப்பேரவையின் மழைக்கால தொடரின் 2வது நாளான நேற்று அந்த யூனியன் பிரதேசத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகையில் கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) டெல்லியை முழு யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்றும், அடுத்த தேர்தல் எதுவும் இருக்காது என்றும் பேச்சுக்கள் உள்ளன. கெஜ்ரிவாலை வெறுப்பதன் மூலம், நீங்கள் நாட்டை வெறுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.

பா.ஜ.க.

அவர்கள் (பா.ஜ.க.) ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் தேர்தலை விரும்பவில்லை. கெஜ்ரிவால் வந்து கொண்டே இருப்பார். கெஜ்ரிவால் முக்கியமில்லை. ஆனால் நீங்கள் தேர்தலை நடத்துவதை நிறுத்திவிட்டு அரசியலமைப்பை கிழித்து விட்டால், இந்த நாடு அழிந்து விடும். டெல்லி முழு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றும், சட்டப்பேரவை கலைக்கப்படும் என்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது நடந்தால் டெல்லி மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

ஆம் ஆத்மி

டெல்லிவாசிகள் தெருக்களுக்கு வருவார்கள். நாட்டிலுள்ள மக்கள் கட்சிகள் (பா.ஜ.க.வுக்கு முன்) உடைந்து போகின்றன அல்லது தலைகுனிந்து கொண்டிருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அவர்களை தங்கள் பேண்ட்டை நனைக்க வைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அவர்களின் (பா.ஜ.க.வின்) இரண்டு முக்கிய தலைவர்கள் பயப்படும் ஒரே கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.