கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும் என்பதால், பா.ஜ.க.வால் காஷ்மீரை கையாள முடியாது.. கெஜ்ரிவால்

 
பா.ஜ.க.

கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும் என்பதால், பா.ஜ.க.வால் காஷ்மீரை கையாள முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: காஷ்மீர் பண்டிட்டுகள் இலக்கு கொலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது, காஷ்மீரில் உள்ள தற்போதைய பா.ஜ.க. அரசு அவர்களை போராட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. அரசு இப்படி நடந்து கொண்டால், மக்கள் படும் துன்பம் இரட்டிப்பாகும். 

அரவிந்த் கெஜ்ரிவால்

தற்போதைய ஆட்சியில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டது, அரசின் செயல் திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும் என்பதால், பா.ஜ.க.வால் காஷ்மீரை கையாள முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்ய வேண்டாம். காஷ்மீரில் இலக்கு கொலைகள் நடப்பது, 1990ம் ஆண்டு மீண்டும் வந்து விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசு) எந்த திட்டமும் இல்லை. 

அமித் ஷா

பள்ளத்தாக்கில் எப்போதெல்லாம் கொலை நடந்தாலும், உள்துறை அமைச்சர் உயர் மட்ட கூட்டத்தை நடத்தினார், இந்த சந்திப்புகள் போதும், இப்போது எங்களுக்கு நடவடிக்கை தேவை. காஷ்மீர் நடவடிக்கையை விரும்புகிறது. ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்பேன். காஷ்மீரி பண்டிட்டுகளுடன் கையெழுத்திட்ட பத்திரங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தான் அற்ப அரசியலை நிறுத்த வேண்டும். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.