சின்னப்பையன் விளையாட்டு விளையாடி இருக்காரு அண்ணாமலை - திமுக விளாசல்

 
a

சுதந்திரக் காற்று கிடைத்ததா?  முன்னாள் அதிகாரி அண்ணாமலை? என்று கேட்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

a

 தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம்,    நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவர் மேலும், பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு.   கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை -திருச்சி விமானத்தில் சென்றதால் 100 பயணிகள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம் என்று கடுமையாக விமர்த்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் ராமன்,  எல்லோரும் சொல்வதுபோல் புகாரளிக்கப்பட்டபடி தேஜஸ்வி சூர்யா ஏன் விமானத்தில் அவசரகால வழியைத் திறக்க வேண்டும்? அவர் அடிக்கடி பறப்பவர் மற்றும் அவசரகால வெளியேறும் வழி என்னவென்று தெரியும். அப்படி இருக்கும்போது வேடிக்கைக்காக அதைத் திறந்தார் என்று கூறப்படுவது போல் நம்பும்படியாக இல்லை.  மேலும்,   அவர் குழந்தை இல்லை. முழு உண்மையும் இன்னும் தெரியவில்லை என்பது என் அனுமானம் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு,  டாக்டர், டாக்டர் லைட்டை தேஜஸ்வி மேல மட்டும் திருப்பாதீங்க. உங்கள் மாநில தலைவரும் சின்னப்பையன் விளையாட்டு விளையாடி இருக்காரு! என்கிறார் ராஜீவ்காந்தி.